Posts

Showing posts from July, 2019

வெக்கை

Image
  வெக்கை: பூமணி 1982இல் வெளிவந்த நாவல். ஒரு குற்றம் எப்போதும் தனித்து நின்று விடுவதில்லை. அது ஒரு சங்கிலி, குற்றத்தின் கின்னிகள் கோர்த்துகொண்டே செல்லும். இது மனித மனதின் பழிவாங்கும் குணத்தின் வெளிப்பாடு. அப்படி தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்கும் 15 சிறுவன் அவனது குடும்பம் படும் பாடு இந்த நாவல். நீதியும், அதிகாரமும் இருப்பவன் செய்யும் குற்றத்தை மிகை படுத்துவதை விட அவர்களுக்கு பல சலுகைகள் வழங்கும். இல்லாதவன் செய்யும் குற்றத்தை அதற்கு எதிரடையாகவே அணுகும் என்று உணர்த்துகிறது. ஒரு குடும்ப உறுப்பினர் யாராலோ கொல்ல படும்போது குடும்பம் படும் வேதனை, அதை காலம் என்ற மருந்து எளிதில் கரைத்துவிட முடியாது. அதுவும் கொலை செய்தவன் கண் முன்னால் நல்லவணக்கபடும் போது. மனதின் வேதனை குரூரமாக மாறுகிறது. இதுவே மனித மிருகத்தின் தடம். பொதுவாக வட்டார வழக்குகளில் நாவல் வாசிக்கும் போது. அது தனி அலாதிதான், கீ ரா, சோலை சுந்தர பெருமாள், மேலாண்மை பொன்னுசாமி மட்டும் அறிந்த எனக்கு தேவி பாரதியின் முன்னுரை பலரை அறிமுகம் செய்தது. மு சுயம்புலிங்கம், வீர வேலுசாமி, அ முத்தானந்தம். மண்ணின் மணங்களை எப்போதும் நுகர செய்கிற வட்...

குற்றப்பரம்பரை

Image
  குற்றப்பரம்பரை : வேல ராமமூர்த்தி. டிஸ்கவரி பதிப்பகம். இந்த நாவலை வாசிக்க முக்கிய காரணம் இயக்குனர் பாலா மற்றும் பாரதிராஜா அவர்களுக்கு இடையில் இந்த நாவலை படமாக்க எழுந்த விவாதங்கள். தமிழிசையின் கற்றபரம்பரை மற்றும் குற்றபரம்பரை என்ற ஒரு டிவிட், மேலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் குற்றப்பரம்பரை குறித்த தகவல்கள் என எல்லாம் சேர்த்து படிக்க நினைத்து இருந்தேன். மூன்று நாட்களில் படித்து முடிக்க முடிந்தது. அப்படி ஒரு வேகம் கதையில். கொம்பூதி, பெருநாழி, பெருமச்சேரி மூன்று கிராம மக்களின் வாழ்வியல், துரோகம், பகை என அனைத்தும் கலந்த கதை. கொம்பூதி கள்ளர்களின் கிராமம் அவர்களுக்கு தொழில் கொள்ளை. அதை விட்டு வேறு தொழில் அறியாதவர்கள். அவர்களுக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம், கலாச்சாரம் எல்லாம் அவர்களே வகுத்தது. ஒரு கலவரத்தில் உயிர் பிழைத்து வந்த கொம்பூதி மக்களை காப்பாற்றி அங்கே குடி அமர உதவியவர்கள் பெருமச்சேரி ஏழை மக்கள். பெருமச்சேரி மக்களை தீண்ட தகாதவர்களாக கருதும் மேட்டு குடி ஊர் பெருநாழி. கள்ளர்கள் கொள்ளை அடிக்கும் பொருட்களை கள்ளர்களிடம் இருந்து தானியங்களுக்கு வாங்கும் மனிதரும் பெருநாழி ஊர்க்காரர். நட்ப...

மாபெரும் தமிழ் கனவு

Image
  மாபெரும் தமிழ் கனவு - இந்து தமிழ் திசை வெளியிடு. தமிழ் இந்து குழுமம் திராவிட அரசியல் புத்தகங்கள் வெளியிட்டு வருகின்றது. தெற்கில் இருந்து ஒரு சூரியன் என முதலில் கருணாநிதி குறித்து வெளிவந்தது. பின் மாபெரும் தமிழ் கனவு என அண்ணாவை குறித்து வெளிவந்து இருக்கிறது. அண்ணாவை குறித்து இப்போது ஏன் வாசிக்க வேண்டும், அதுவும் 800 பக்கங்கள் கொண்ட புத்தகம் என்று யோசித்து கொண்டே தொடங்கினேன். ஆனால் அண்ணாவை படிக்க படிக்க திராவிட அரசியல் ஏன் ஆரம்பம் ஆகவேண்டும் என்பதன் நோக்கம் தெளிவாக விளங்குகிறது. சாதாரண குடும்ப பின்னணி, சீட்டாட்டம், மூக்குபொடி என வாழ்ந்த சராசரி மனிதனின் சிந்தனை ஒரு சமூகத்தை சிந்திக்க வைத்தது அவரை தலைவர் ஆக்கியது. அண்ணாவின் எண்ண ஓட்டங்கள் மூன்று காலநிலைகளில் பிரிக்கலாம். தி க காலம், திராவிட நாடு கோரிக்கை காலம், திராவிட நாடு கோரிக்கை கைவிட்டு அதன் காரணங்கள் ஒன்றும் சீராகத காலம். இதில் இந்த புத்தகம் அதிகம் அவரது பின் இரண்டு காலங்களை அதிகம் கூறுகிறது. அண்ணாவின் கொள்கை துணிவு இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேருக்கு அரசியலில் உள்ளவர்களுக்கு உண்டு என்று புரியவில்லை. சுதந்திர தினம் துக்க நாள் ...

திருக்குறள் - கூகிள் குரோம் அப்பிளிக்கேஷன்

Image
  அனைவருக்கும் வணக்கம்! கணிப்பொறியில் கூகிள் குரோம் பிரௌசரில் திருக்குறள் படிக்க ஒரு சிறு அப்பிளிக்கேஷன் செய்துள்ளேன். Google extension பகுதியில் "திருக்குறள் - thirukural" என்று தேடினால் இதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய முடியும். https://chrome.google.com/webstore/detail/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-thirukkural/mfimcikjdhhihejlbdablbhjhkdljalm