பிச்சிப் பூ பொன்னீலன் நீலன், சின்ன நீலன், மூர்த்தியார் என மூன்று அண்ணன் தம்பிகளை கொண்ட ஒரு குடும்பம். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த வாழ்க்கையை, இழப்புகளை, வெற்றிகளை, ஏமாற்றங்களை இந்த நாவல் வரைந்து செல்கிறது. நீலன் ஆங்கிலேயர்களின் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கி, சிறுவயதில் மதச் சிந்தனை சிக்கலுக்கு உள்ளாகி அவரது ஆசிரியர்களால் பேரானந்தம் என்று கிறிஸ்தவராக மாறுகிறார். இந்த மாற்றம் தனது மற்ற இரு சகோதரர்களின் பள்ளி படிப்பை நிறுத்தி வைக்கிறது. ஆனால் பேரானந்தம் தனது படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வக்கீலாக முன்னேறுகிறார் தனது வாழ்வில். சின்ன நீலன் கொடிய நோயில் விழுகிறார். மருத்துவத்திற்காக அண்ணன் உதவியை நாடாமல், சாமிதோப்பு வைகுண்டர் இடம் தன்னை சரணாகதி ஆக்கிக் கொள்கிறார். இந்த வார்ப்பு அவரை எல்லா ஜாதி மக்களையும் ஒன்றுபோல நடத்த சொல்கிறது. ஊருக்கு திரும்பும் அவர் அம்மன் கோவில் எழுப்புகிறார், ஜாதி பாகுபாடற்ற வழிபாட்டு முறையினை முன்னெடுக்க செய்கிறார். மூர்த்தியார் கீர்த்தி ஆழமாக அழுத்தமாக புனையப்பட்டுள்ளது. தற்காப்புக் கலைகள் பல கற்று தேர்ந்தவர் மூர்த்திய...
Comments
Post a Comment