Posts

Showing posts from December, 2019

மனிதகுல வரலாறு

Image
  மனிதகுல வரலாறு எஸ் ஏ பெருமாள் 1) அன்னை பூமி 2) சூரியக் குடும்பம் 3) பூமியின் தோற்றம் 4) மா கடல்கள் 5) உயிரின் உதயம் 6) மனிதக் குரங்கும் குரங்கு மனிதனும் 7) தாய்வழிச் சமூகம் 8) உயிரினங்களின் காதல் 9) டார்வின் கண்டுபிடித்த இயற்கைத் தேர்வு 10) ஆவி உலகமும் மாயக்கண்ணாடியும் 11) அறிவுத் தேடலும் கண்டுபிடிப்புகளும் 12) விஞ்ஞானமும் மானிட வளர்ச்சியும் எஸ் ஏ பெருமாள் அவர்களைப் பற்றியும் விரிவாக விளக்கத் தேவையில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். மனிதன், மனிதகுலம் அதன் தோற்றம் குறித்து பல புத்தகங்கள் உள்ளன. மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் என்று ஒரு ரஷ்ய புத்தகத்தை வாசித்தது உண்டு. யுவாள் நோ ஹராரே அவர்களின் சேப்பியன்ஸ் புத்தகமும் வாசித்தது உண்டு. அந்த வரிசையில் இது தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை தருவது. டார்வின், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் குறிப்புகள் அதிகம் கையாளப்பட்டுள்ளது. 6 முதல் 9 வரையிலான பகுதிகள் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன. அங்கங்கே தமிழகத்தின் சான்றுகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் மனித குலம் பற்றி, கருத்துமுதல்வாதம் பொரு...

Ikigai - the japanese secret to a long and happy life

Image
Ikigai - the japanese secret to a long and happy life - அதிக காலம் மற்றும் மகிழ்ச்சியாக வாழ ஜப்பானியர்களின் ரகசியம். Hector Garcia Puigcerver தமிழ் வாசகர்களுக்கு ஆங்கில புத்தகங்களை அறிமுகம் செய்யலாமா என்று அடிக்கடி எழுவதுண்டு இருந்தாலும் நல்லவைகள் எந்த மொழியில் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இதை பகிர்கிறேன். மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன என்கிற ஆய்வு பல தளங்களில் பல இடங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையின் நோக்கத்தை பற்றிய பல புத்தகங்கள் உலகங்களும் வாசிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதில் எனக்கு பிடித்த ஒன்று விக்டர் ஃபிராங்க் எழுதிய man's search for meaning. இந்த புத்தகமும் மனித வாழ்க்கையின் நோக்கத்தை ஆராய்கிறது ஜப்பானியர்களின் வழக்கப்படி. ஜப்பானியர்களின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள் என கூறுவதற்கு முன்பு உலகில் இதுவரை மனித வாழ்க்கையின் நோக்கம் குறித்த ஆராய்ச்சிகளை ஆய்வு செய்கிறது புத்தகம். உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் மனிதர்கள் அதிகப்படியான வயது வரை வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்களில் ஜப்பானில் ஒகினாவா என்ற மாகாணத்தில் வாழும் மக்களும் குறி...

அர்ஜுனனின் தமிழ் காதலிகள்

Image
  அர்ஜுனனின் தமிழ் காதலிகள் அ. கா. பெருமாள் அ. கா. பெருமாள் பற்றி அதிகம் கூற தேவையில்லை தமிழ்நாட்டு நாட்டார் வழக்கங்களை மரபுகளை பல தலங்களில் ஆய்வு செய்து கிட்டத்தட்ட 80 புத்தகங்களுக்கு மேல் எழுதி இருப்பவர். இந்த புத்தகம் மகாபாரத மூலக் கதையிலிருந்து விலகி அதன் தொடர்ச்சியை எழுதிய சில நூல்களின் விளக்க தொகுப்பு. மகாபாரதம் என்ற காவியம் எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டது இதுபோன்ற நாட்டார் கதைகளின் வழியாக இருக்கலாம். இந்த புத்தகம் படிக்கும் முன்பு வரை அல்லி அர்ஜுன என்கிற வார்த்தை எதற்காக உபயோகிக்கப் பட்டது என்பது எனக்கு தெரியாது. அல்லி மதுரையை ஆண்ட அரசி அர்ஜுனன் பாண்டவர்களின் ஒருவன். வட நாட்டிலிருந்து வந்து மதுரையின் அரசியை மணம் முடிக்கிறான். அதற்கு கிருஷ்ணன் துணை செய்கிறான். அர்ஜுனன் செல்லுமிடங்களில் எல்லாம் பெண்களின் மேல் மயக்கம் கொள்கிறான். அவர்களை அடைய கிருஷ்ணன் உதவி புரிகிறான். இவற்றைத் தாண்டி பிற கதை மாந்தர்களையும் சுவாரசியமாக அதீத கற்பனையுடன் இந்த நூல் விளக்குகிறது. திரௌபதிக்கு கர்ணனின் மேல் ஒரு கரிசன அல்லது காதல் பார்வை இருந்திருக்கிறது. கர்ணன் தாழ்ந்த குலத்தில் பிறந...

புன்னகைக்கும் பிரபஞ்சம்

Image
  புன்னகைக்கும் பிரபஞ்சம் - கபீர். தமிழில் - செங்கதிர். இடையில் ஒன்றரை மாதம் தவற விட்டுவிட்டேன். இந்த ஒரு இடைவெளியில் நான்கு புத்தகங்கள் படித்தேன். கபீரின் கவிதை வாசிப்பது இதுவே முதல் முறை. கபீரின் வரலாறு முழுத் தெளிவு இல்லாமல் உள்ளது சற்று வருந்தத்தக்கது. எல்லாம் நாம் கற்பித்த கற்பிதங்கள் புனிதங்கள் என்று பாரபட்சமில்லாமல் மன நிலைகளை உடைத்து காட்டுகிறார். இங்கு பாரபட்சம் என்பது மதம் கடந்து. இந்தப் புத்தகம் குறித்து எஸ் ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை சிறப்பாக உள்ளது.