Posts

Showing posts from September, 2020

இந்துமதம் எங்கே போகிறது?

Image
  இந்துமதம் எங்கே போகிறது? அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் நக்கீரன் பதிப்பகம் விலை 275 ரூபாய் 352 பக்கங்கள் புதுமைப்பித்தன் தன்னுடைய கடவுளின் பிரதிநிதி என்ற சிறுகதையில் இப்படி கூறுகிறார். "திரு சங்கர் சிற்றூரில் தமது தொண்டை பிரச்சாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்கினியால் புனிதமாக்கப்பட்ட வர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவு இல்லாது போட்டு அடித்து உடைப்பவர்." இந்த வரிகள் சங்கருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களுக்கு அப்படியே பொருந்துகிறது. இவர் சிறை செல்லாமல் சிந்தனையால் புனிதமாக இருக்கிறார். இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? என்ற கேள்வியில் முதல் கட்டுரையை தொடங்கி. ஜாதிகள் தொடக்கம், அதன் விரிவாக்கம். வேதம், மநு, உபநிஷத்துக்கள், உபநயனம் என பலவற்றை எடுத்துக்கூறி அதற்கு தக்க உதாரணமும் கொடுத்துள்ளார். மேலும் வேதம் மற்றும் மநுவுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள். சங்கரர் ராமானுஜர் வியாசர் ஜெய்மினி எனப் பலரின் கதைகள். பல மடங்களின் கதைகள், பல புனித தளங்களின் கதைகள். பல சடங்குகளின் காரணங்கள். இவை எல்லாவ...

வாய்க்கால்

Image
  வாய்க்கால் பூமணி டிஸ்கவரி புக் பேலஸ் விலை ரூபாய் 80 80 பக்கங்கள் கோபால், கோபாலின் அப்பா வள்ளிமுத்து வாத்தியார், கோபாலின் அம்மா நல்ல மணி, வெள்ளையம்மா மதினி, கோபாலின் காதலி லட்சுமி, லட்சுமியின் கணவன் வடிவேலு, கோபாலின் நண்பன் சுருளி முருகன் என பலர் கொண்டு இந்த கதை விரிவடைகிறது. கோபால் வெளியூரிலிருந்து பிறந்த ஊருக்கு பல வருடங்கள் கழித்து வருகிறான். ஊரில் அவன் சிறுவயதில் கழித்த இடங்களில் கடக்கும் பொழுது அவனது நினைவுகளில் விழும் கீறல்கள் பால்யகால காதலை மெல்ல மெல்ல அவன் சிந்தனையில் பனிதுளிகள் ஆக்குகிறது. அது நம்மையும் சில்லென குளிரச் செய்கிறது. ஊரில் லட்சுமி மட்டும்தான் மேல் வகுப்பு வரை படிக்க சென்றாள், அதுவும் தொடர கொடுத்து வைக்கவில்லை. லட்சுமி படிப்பை தொடர முடியாத பட்சத்தில் கோபால் லட்சுமி இடையே பழக்கவழக்கங்களில் இடைவெளி வருகிறது. மேற்படிப்புக்காக வெளியூர் செல்கிறான் கோபால் திரும்பி வரும்பொழுது அம்மாவின் கட்டாயத்தால் வேறு பெண்ணை மணம் முடிக்கிறான். நினைவுகளில் தவழ்வது சுகம் என்றாலும், அனேக நேரங்களில் எதார்த்தம் வேறு விதத்திலேயே அமைகிறது. லட்சுமிக்கு நடந்த சோகங்களை அதை கடக்க லட்சுமி எடு...