Posts

Showing posts from April, 2020

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

Image
  தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் பாரதி புத்தகாலயம் 239 பக்கங்கள் விலை: 150 ரூபாய் வாசிப்பவருக்கு வாசகன் என்று பெயர் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புலப்படவில்லை. பிற கலைகளில் அதை உள்வாங்குபவர்களுக்கு பொதுவாக ரசிகன் என்று ஒருமைப் படுத்துதல் சாத்தியம். ஒரு சிற்பியின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், ஒரு ஓவியனின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், இப்படி இன்னும் பல. வாசகன் என்பவனும் எழுத்துக்களை ரசிக்க இவனும் ஒரு ரசிகன் தான், ஆனால் வாசகன் என்ற தனித்த அடையாளம் தரப்பட்டிருக்கிறது. இது எழுத்தாளர்களில் குறுஞ்சதியாக கூட இருக்கலாம். வாசகனுக்கு ஒரு சவுகரியம் என்னவென்றால் எழுத்தாளன் தன் படைப்புகளால் தன் வாசகனை எழுத்தாளராகவும் ஆக்க உந்த செய்யும் சாத்தியக்கூறுகள் பிற கலைகளுடன் ஒப்பிடும்போது எழுத்துலகில் அதிக சாத்தியம் வாய்ந்த ஒன்று என்றும் மேலும் அதற்கான மெனக்கெடல் குறைவு என்று எனக்குப்படுகிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 32 கதைகள் உள்ளது. பூ என்ற தமிழ் படத்தின் மூல சிறுகதையான வெயிலோடு போய் என்ற சிறுகதையும் இதில் அடக்கம். கண்முன் கொட்டிக்கிடக்கும் ஆசைகளை, அன்பை, அலட்சியகளை, ஏமாற்றத்தை எளிமையான எழுத்துக்களின் மூ...

வெண்ணிறக் கோட்டை

Image
  வெண்ணிறக் கோட்டை ஆசிரியர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக் மொழிபெயர்ப்பாளர்: ஜி குப்புசாமி பக்கங்கள்: 176 விலை: Rs 200 விஞ்ஞானம் எழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற ஒரு மேற்கத்திய சிந்தனையாளன் ஒரு கப்பல் பயணத்தில் துருக்கிய கப்பல் படையால் சிறை பிடிக்கப் படுகிறான். முதலில் அவன் சாதிக்பாட்சா என்ற சிறு நில மன்னனின் சிறையில் அடைக்கப்படுகிறான். இவனுக்கு மருத்துவம் தெரியும் என்பதால் சிறையில் சற்று பிரபலம் அடைகிறான். அதனால் பாட்ஷா விற்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பும் கிட்டுகிறது. இதனால் சிறையிலிருந்து வெளியில் வாழ, அவன் அவனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஹோஜா என்பவனுக்கு அடிமையாக பரிசளிக்க படுகிறான். ஹோஜா விரும்பினால் இவனை விடுவிக்கலாம் அல்லது அடிமையாகவே வைத்திருக்கலாம். ஹோஜா ஒரு அறிவியல் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவன் என்றாலும் தனித்துவமானவன். பாட்ஷா இவனை பலமுறை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற கூறியும் மறுத்துவிடுகிறான். ஹோஜாவும், இவனும் இணைந்து ஒரு மாபெரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நிகழ்த்துகிறார்கள். அதில் பாஷா துருக்கியின் சுல்தானை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கிறார். இதில் ஹோஜ...