Posts

Showing posts from February, 2020

விஞ்ஞான லோகாயத வாதம்

Image
  விஞ்ஞான லோகாயத வாதம் ராகுல் சாங்கிருத்தியாயன் தமிழில்: ஏ ஜி எத்திராஜீலு பக்கங்கள்: 153 விலை: 135 சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சி சாலையில் அதிகம் விற்ற 10 புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்களின் வால்கா முதல் கங்கை வரை புத்தகமும் இடம்பெற்றிருந்தது. வடமாநிலத்தை சேர்ந்த இவரின் தமிழகத்தில் அதிகம் வாசிக்கப்படுவது வரவேற்கத்தக்கதே. இந்தப் புத்தகம் எழுதிக் கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. உண்மையில் இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களை இரண்டு மூன்று முறை படித்து அர்த்தம் புரிந்து கொண்டேன். ஒரு புரியாத ஆங்கில படத்தை பார்ப்பது போன்று ஒரு அனுபவத்தை தந்தது இந்த புத்தகம். அதற்கு நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்ட மிக எளிமையான தத்துவங்கள் மட்டுமே காரணமாக இருக்கலாம். அது திருக்குறள் ஆக இருக்கலாம், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற கீதை சாரமாக இருக்கலாம் அல்லது காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்ற கண்ணதாசனின் வரிகளாக இருக்கலாம். நம் சமூகத்தில் தத்துவ தர்க்கங்கள் அதிகம் இல்லாத சூழலை நாம் ஏன் ...

The Alchemist

Image
  The Alchemist Paulo coelho தமிழில் ரசவாதி என்ற பெயரில் நாகலட்சுமி சண்முகம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். ஒரு சிறுவன் கனவில் வரும் புதையலைத் தேடி ஸ்பெயின் நாட்டின் அந்தாலூசியா (Andalusia) நகரிலிருந்து எகிப்து பிரமிடு வரை தனது பயணத்தைத் தொடங்குகிறான். இந்தப் பயணம் அவனை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது, எந்தவிதமான கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறான், அவன் சந்திக்கும் மனிதர்கள் என பல கடந்து இறுதியில் அவன் தனது கனவில் வந்த புதையலை அடைந்தானா என்பது கதை. இந்த கதை கனவு காண்பவர்களுக்கு அல்லது கனவை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கும் முக்கியமாக 4 தடைகளை வெளியிட்டு செல்கிறது ஒன்று நமது முன்னால் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைகள் அல்லது வழக்கம். இது தாண்டி மீண்டும் நமது கனவுகளின் மீது நம்பிக்கை உண்டென்றால் இரண்டாவதாக வருவது காதல் அல்லது குடும்பம். நம் கணவருக்காக நாம் நம்மை சுற்றியுள்ளவர்களை இழந்துவிடுவோமோ என்ற தவிப்பு. 3 தோல்விகளைக் கண்டு பயம். கனவுகளை மெய்ப்பட முயற்சிக்கும் பொழுது பல தோல்விகளை நாம் சந்திக்க நேரிடும். எல்லாத் தோல்விகளின் இறுதியிலும் நமது கனவுக்கு உரமிட்டு கொண்டே செல்ல வேண்டும். இ...