Posts

Showing posts from January, 2020

பட்டத்து யானை & அரியநாச்சி

Image
  பட்டத்து யானை ஆசிரியர்: வேல ராமமூர்த்தி பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள்: 376 விலை 300 புத்தக வாசிப்பில் வேகமான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகங்கள் பல உள்ளன, எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அதற்கு நேர் எதிரிடையாக சிக்கலான அல்லது ஆழ்ந்த வாசிப்பனுபவம் கோரும் படைப்புகளும் அதிகம் உள்ளது எழுத்தாளர்களும் அதிகம் உள்ளனர். இவற்றில் எதை, யாரை, எப்படி வாசிப்பது என்பதையெல்லாம் வாசகர்கள் தங்களின் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்தத் தேர்வுக்கு ஆகச்சிறந்த உதவி தங்களின் சிந்தனை மற்றும் ரசனையாக மட்டுமே இருக்கட்டும். முதல் ரக புத்தகங்களுக்கு வாசகர்கள் தங்களின் சிந்தனை திறன் மற்றும் நேரம் ஆகியவற்றை மிகவும் குறைவாக செலவழிக்க நேரிடும். அப்படிப்பட்ட பல படைப்புகளில் இழையோடும் வேகம், அவற்றின் மேலிடும் வியப்பு அவர்களை புத்தகத்தை கீழே வைக்க விடாது. அப்படி இரண்டு புத்தகங்களை அடுத்தடுத்து படிக்க முடிந்தது. தனுஷ்கோடி வாணிப நகரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறை நடக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. வெள்ளை அதிகாரி லாரன்ஸ் தலைமையில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை சோதனை இடுகிறார்கள். சோதனையில் அகப்படா...

பிச்சிப் பூ

Image
  பிச்சிப் பூ பொன்னீலன் நீலன், சின்ன நீலன், மூர்த்தியார் என மூன்று அண்ணன் தம்பிகளை கொண்ட ஒரு குடும்பம். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த வாழ்க்கையை, இழப்புகளை, வெற்றிகளை, ஏமாற்றங்களை இந்த நாவல் வரைந்து செல்கிறது. நீலன் ஆங்கிலேயர்களின் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கி, சிறுவயதில் மதச் சிந்தனை சிக்கலுக்கு உள்ளாகி அவரது ஆசிரியர்களால் பேரானந்தம் என்று கிறிஸ்தவராக மாறுகிறார். இந்த மாற்றம் தனது மற்ற இரு சகோதரர்களின் பள்ளி படிப்பை நிறுத்தி வைக்கிறது. ஆனால் பேரானந்தம் தனது படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வக்கீலாக முன்னேறுகிறார் தனது வாழ்வில். சின்ன நீலன் கொடிய நோயில் விழுகிறார். மருத்துவத்திற்காக அண்ணன் உதவியை நாடாமல், சாமிதோப்பு வைகுண்டர் இடம் தன்னை சரணாகதி ஆக்கிக் கொள்கிறார். இந்த வார்ப்பு அவரை எல்லா ஜாதி மக்களையும் ஒன்றுபோல நடத்த சொல்கிறது. ஊருக்கு திரும்பும் அவர் அம்மன் கோவில் எழுப்புகிறார், ஜாதி பாகுபாடற்ற வழிபாட்டு முறையினை முன்னெடுக்க செய்கிறார். மூர்த்தியார் கீர்த்தி ஆழமாக அழுத்தமாக புனையப்பட்டுள்ளது. தற்காப்புக் கலைகள் பல கற்று தேர்ந்தவர் மூர்த்திய...