தனது பொக்கிஷத்தை விற்ற துறவி
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி (The monk who sold his Ferrari) ராபின் ஷர்மா விலை 199 பக்கங்கள் 308 சுயமுன்னேற்ற புத்தகங்கள் உண்மையிலேயே வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருமா என்பது பற்றி அதிகம் யோசித்து கொண்டதில்லை. அது ஒருவேளை வாசிப்பவர்களின் நம்பிக்கையையும் மனநிலையையும் பொருத்தது. இந்தவகை புத்தகங்களில் நமக்கு தெளிவு கிடைக்கிறதோ இல்லையோ பலவகையான சுவாரசிய தகவல்கள் கொண்டிருக்கும். நடுத்தர வயது கடந்த ஜூலியன் என்ற வெற்றிகரமான வக்கீல் தொழில் புரிந்த ஒருவர். தான் இந்தியாவின் இமயமலை சிகரங்களில் கற்றதை ஏழு முக்கிய கருத்துக்களாக எடுத்துக்கூறும் நூல் இது. அங்கங்கே வரும் குட்டி கதைகள் புத்தகத்தை வேகமாக நகர்த்துகிறது. நம் பயத்தை நாமே நேர்கொண்டு சந்திக்க வேண்டும், அதை அடித்து வீழ்த்த வேண்டும் என்று கூறும் பக்கங்கள். காலையில் எழுதல், புத்தகம் வாசித்தல் போன்ற கருத்துக்களை கூறும் பகுதிகளும் நன்று. விதியை நாம் வடிவமைத்துக் கொள்ள முடியும் என்று திடமாக நம்பிக்கை ஏற்படுத்தும் ஆசிரியர் ஆன்மாவை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் மெனக்கெடுவது ஏனென்று புரியவில்லை. கடந்த காலத்தில் வாழாதீர்கள், எதிர்காலத்தை நினைத்து அ...